பிரபல நடிகையான யாஷிகா நேற்று தன் நண்பர்களான வள்ளி செட்டி பவணி, ஆமீர், சையது ஆகியோருடன் நள்ளிரவு பார்ட்டிக்கு சென்றதாக தெரிகிறது. அங்கிருந்து திரும்பிய யாஷிகா தானே காரை ஓட்டி வந்துள்ளார். மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது விபத்துக்குள்ளானது.