கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு போன்ற படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை யாஷிகா, இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற அடல்ட் காமெடி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இதையடுத்து இவர் நடித்த நோட்டா, ஜாம்பி போன்ற படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் யாஷிகா.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை யாஷிகாவின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்தது. அவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.
தற்போது நடிகை யாஷிகாவின் கைவசம் சல்பர், கடமையை செய், இவன் தான் உத்தமன், ராஜபீமா, பாம்பாட்டம் என அரை டஜன் படங்கள் உள்ளன.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வந்த யாஷிகாவிற்கு கடந்தாண்டு ஒரு சோகமான ஆண்டாக அமைந்தது. நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கினார் யாஷிகா.
இந்த விபத்தில் நடிகை யாஷிகாவின் நெருங்கிய தோழி வள்ளிசெட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடிகை யாஷிகா 4 மாத சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.
இதையடுத்து தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் யாஷிகா, அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது குட்டையாக இருக்கும் மாடர்ன் உடையில் மொத்த அழகும் தெரிய கும்முனு போஸ் கொடுத்து போட்டோ போட்டுள்ள யாஷிகா தான் குண்டாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.