yashika : ச்ச.... இவ்ளோ பெரிய சான்ஸ மிஸ் பண்ணிட்டாங்களே.... விபத்தால் பறிபோன வாய்ப்பு - கண்கலங்கிய யாஷிகா

Ganesh A   | Asianet News
Published : Jan 02, 2022, 06:40 AM IST

புத்தாண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷிகா. விபத்தால் தான் இழந்த மிகப்பெரிய வாய்ப்பு குறித்து கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

PREV
18
yashika : ச்ச.... இவ்ளோ பெரிய சான்ஸ மிஸ் பண்ணிட்டாங்களே.... விபத்தால் பறிபோன வாய்ப்பு - கண்கலங்கிய யாஷிகா

ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்த அவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டபின் மிகவும் பிரபலமானார்.
 

28

இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்தன. இவர் கைவசம் சல்பர், எஸ்.ஜே.சூர்யாவின் கடமையை செய், மகத்தின் இவன் தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீமா உள்பட ஏராளமான படங்கள் உள்ளன.

38

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் யாஷிகா, கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது. 

48

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதியதில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

58

படுகாயம் அடைந்த யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 4 மாதமாக படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா, தற்போது தான் எழுந்து நடக்கும் அளவுக்கு குணமாகி உள்ளார். 

68

விபத்துக்கு பின் சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்த யாஷிகா, தற்போது மீண்டும் ஆக்டிவாகி உள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டுக்கு சென்றார்.

78

இந்நிலையில், புத்தாண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷிகா. விபத்தால் தான் இழந்த மிகப்பெரிய வாய்ப்பு குறித்து கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். அதன்படி இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள யாஷிகா தேர்வாகி இருந்தாராம். 

88

ஆகஸ்ட் மாதம் அதற்காக மும்பை செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு ஒரு வாரம் முன்னதாக ஜூலை 24-ந் தேதி விபத்தில் சிக்கியதால் அந்த மிகப்பெரிய வாய்ப்பு பறிபோனதாக கூறியுள்ளார். நடிகை யாஷிகா ஏற்கனவே தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories