சென்னை 28 படத்தில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகளான இவர், அடுத்தடுத்து அஞ்சாதே, வனயுத்தம், சென்னை 28 இரண்டாம் பாகம், கற்றது களவு, கசடதபற போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலட்சுமி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் பேட்டி ஒன்றில் மீடூ குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : சினிமாவில் கேஸ்டிங் கவுச் என்பது இருக்கிறது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான் இதற்கு காரணம். எதோ ஒரு பெண் சம்மதித்ததனால் தான் மற்ற பெண்களிடமும் கேட்குறாங்க, எனக்கும் இதுபோல் நடந்திருக்கிறது.