29 லட்சம் மோசடி... நடிகை சன்னி லியோனிடம் போலீசார் அதிரடி விசாரணை..!

First Published Feb 6, 2021, 6:47 PM IST

நடிகை சன்னி லியோன், கடைதிறப்பு விழாவில் கலந்து கொள்வதாக கூறி, 29 லட்சம் பெற்று கொண்டு மோசடி செய்துவிட்டதாக ஷியாஸ் என்பவர் கொடுத்துள்ள புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

பாலிவுட் திரையுலகில் பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து, ரசிகர்களை கிற்ங்கடித்துள்ள நடிகை சன்னி லியோன், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
undefined
ஏற்கனவே தமிழில் இவர், 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு கார்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள நிலையில், 'வீரமா தேவி' என்கிற படத்திலும் கமிட் ஆனார். பின்னர் அந்த படம் ட்ரோப் ஆனது.
undefined
இந்நிலையில் இவர் மலையாளத்தில் மம்முட்டி நடித்திருந்த 'மதுர ராஜா' படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி இருந்ததால், இவருக்கு மலையாள திரையுலகிலும் ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.
undefined
எனவே ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், கேரளாவை சுற்றி பார்க்கவும், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் சன்னி லியோன் கேரளா வந்துள்ளார்.
undefined
அப்போது, கொச்சியில் உள்ள துணிக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ளும்படி, எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரை சேர்ந்த ஷியாஸ் என்பவர் 29 லட்சம் பணம் கொடுத்துள்ளார். பணத்தை மற்றும் பெற்று கொண்ட சன்னி லியோன், துணிக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
undefined
இதை தொடர்ந்து கேரள டிஜிபியிடம். ஷியாஸ் நடிகை சன்னி லியோன் தன்னிடம் 29 லட்சம் பெற்று கொண்டு, மோசடி செய்து விட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து சன்னி லியோனிடம் உரிய விசாரணை நடத்த கூறி கேரள டிஜிபி கொச்சி குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார்.
undefined
இவரது உத்தரவின் பெயரில் சன்னி லியோனிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
undefined
click me!