வீட்டில் காஸ்ட்லியான நாய்களை வளர்க்கும் ஷிவானி... அதன் விலை இத்தனை லட்சமா?

First Published Aug 8, 2023, 1:06 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வரும் ஷிவானி தன் வீட்டில் விலையுயர்ந்த நாய்களை வளர்த்து வருகிறாராம்.

பகல் நிலவு சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி. அதில் அசீமுக்கு ஜோடியாக நடித்த ஷிவானி அடுத்ததாக கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஒரு கட்டத்தில் சீரியலுக்கு எண்ட் கார்டு போட்ட ஷிவானி, சினிமாவில் நுழைய முடிவெடுத்தார். அதற்கான வாய்ப்புகளைப் பெற பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு தளமாக பயன்படுத்திக் கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஷிவானிக்கு சோசியல் மீடியாவில் மவுசு அதிகரிக்கத் தொடங்கியதும் அவருக்கு பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. அந்த வகையில் அவர் முதல் படமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்தார். அவர் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் ஷிவானி. இதையடுத்து அவர் நடித்த டிஎஸ்பி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய திரைப்படங்கள் தோல்வியை தழுவின.

இதையும் படியுங்கள்... ஜெயிலர் படத்திற்கு கூடுதல் டிக்கெட் கேட்டு ரசிகர்கள் அடாவடி; திரையரங்க மேலாளர் மருத்துவமனையில் அனுமதி

பின்னர் வெற்றி ஹீரோவாக நடித்த பம்பர் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் ஷிவானி. இப்படமும் அவருக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை. இதையடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிக்கும் முனைப்பில் உள்ளார் ஷிவானி. நடிகை ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடும் ஷிவானி அண்மையில் தன்னுடைய செல்ல நாய்குட்டியை கொஞ்சியபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.

அந்த நாய் குறித்த தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. ஹஸ்கி வகை நாயான அது மிகவும் விலை உயர்ந்த நாயாம். அதன் விலை மட்டும் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த நாய்க்கு வோட்கா என பெயரிட்டுள்ளார் ஷிவானி. அவரிடம் ஹஸ்கி தவிர மேலும் இரு நாய்களும் உள்ளன. அவையும் காஸ்ட்லி நாய்கள் தான். அவரிடம் இருக்கும் நாய்களின் மதிப்பு மட்டுமே ஒரு லட்சத்திற்கு மேல் இருக்குமாம். நடிகை ஷிவானி இவ்வளவு காஸ்ட்லியான நாய்களை வளர்த்து வருவதை அறிந்த ரசிகர்கள் வாயடைத்துப் போஉ உள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஓடிவந்து கட்டிப்பிடிச்ச பகத் பாசில்... ஒருவழியாக மாமன்னன் ரத்னவேலு பற்றிய சீக்ரெட்டை வெளியிட்ட மாரி செல்வராஜ்

click me!