2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்". இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. "பிரேமம்" படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.
ஒரே ஒரு படத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது எல்லாம் அனைவருக்கும் சாத்தியமாகாது. ஆனால் சாய் பல்லவி தெலுங்கு, தமிழ், மலையாளம் என 3 மாநில ரசிகர்களின் மனதையும் ஒரே படத்தில் கொக்கிப் போட்டு கவர்ந்திழுத்தார்.
sai pallavi
தமிழில் சாய் பல்லவி வரவுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். மாரி 2 படத்தில் தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி ரவுடி பேபி பாடலுக்கு போட்ட ஆட்டம் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர வைத்தது. அதன் பின்னர் சூர்யாவுடன் என்.ஜி.கே.படத்தில் நடித்தார்.
sai pallavi
தெலுங்கு பக்கம் போன சாய் பல்லவி ராணாவுடன் விராட பருவம், நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என நடித்து வருகிறார். தெலுங்கில் பிசியாக வலம் வரும் சாய் பல்லவி மீண்டும் தமிழில் நடிக்க வர உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
sai pallavi
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துகிடந்த நிலையில், சாய் பல்லவி வீட்டில் சத்தமே இல்லாமல் விசேஷம் ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. இதையடுத்து குடும்பத்தினருடன் சாய் பல்லவி எடுத்துக் கொண்ட போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
sai pallavi
சாய் பல்லவி தனது தாத்தாவுடைய 85வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தாத்தா, பாட்டி மற்றும் தங்கையுடன் சாய் பல்லவி எடுத்துக் கொண்ட க்யூட் போட்டோஸ் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
sai pallavi
சாதாரண புடவை, தலையில் மல்லிகைப் பூவுடன் துளியும் மேக்கப் இல்லாமல் பக்கத்து வீட்டு பெண் போல அழகாக இருக்கும் சாய் பல்லவியின் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது. குறிப்பாக தங்கையை கட்டி அணைத்தபடி சாய் பல்லவி கொடுத்துள்ள ஒற்றை போஸ் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.