தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. 'ரெமோ’ இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படம் மூலமாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது.
undefined
தெலுங்கு திரையுலகில் சில படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமான ராஷ்மிகா மாந்தனா, ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குடகு மாவட்டம் வஜ்ரபேட்டில் இருக்கும் ராஷ்மிகாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
undefined
அந்த ரெய்டில் கோடிக்கணக்கில் கணக்கில் வராத சொத்துக்கள் குறித்த ஆவணங்கள், பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. அந்த சோதனை குறித்து தற்போது ராஷ்மிகா மந்தனா மனம் திறந்துள்ளார்.
undefined
அப்போது நான் ஒரு படத்துக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் பரவின. அந்த செய்திகள் தான் வருமான வரி சோதனை நடக்க காரணமாக அமைந்தது. உண்மையில் நான் ரூ.2 கோடி சம்பளம் வாங்கவில்லை. நான் அவ்வளவு பெரிய தொகையை கேட்டாலும் தயாரிப்பாளர்கள் தர மாட்டார்கள். கதாநாயகனுக்கே அவ்வளவு சம்பளம் தருவது இல்லை. அப்படியிருக்க எனக்கு எப்படி தருவார்கள்.
undefined
நான் ஐதராபாத்தில் புது வீடு வாங்கியது பற்றியும் பேசுகிறார்கள். ஓட்டலில் தங்குவது சிரமமாக இருந்ததால் வீடு வாங்கினேன். என்னை பற்றி வரும் கிசுகிசுக்கள் ஆரம்பத்தில் வருத்தமாக இருந்தது, இப்போது கண்டுகொள்ளவது இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
undefined