தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த பூர்ணா... கடந்த ஆண்டு துபாய்யை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
தன்னுடைய கர்ப்ப காலத்தை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்து வரும் பூர்ணா... அவ்வப்போது தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக சில வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதை தொடர்ந்து, தற்போது நடிகை பூர்ணா அழகிய கவுன் அணிந்து பிரக்னன்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
இவர் தமிழில் அறிமுகமான புதிதில்... பார்ப்பதற்கு நடிகை அசீன் போலவே இருக்கிறார் என பல ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். ஆனால் ஏனோ அசீன் அளவிற்கு இவரால் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக ஜொலிக்க முடியாமல் போனது.