பிரமாண்டமாக நடந்த நடிகை பூர்ணாவின் வளைகாப்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..!

First Published Jan 30, 2023, 3:24 PM IST

நடிகை பூர்ணா, தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சமீபத்தில் அறிவித்த நிலையில், இவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நடந்துள்ளது. இதுகுறித்து புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மலையாளம், தமிழ், போன்ற மொழிகளில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர், நடிகை பூர்ணா. இவர் கடந்த ஆண்டு துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், மிக பிரமாண்டமாக இவருக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர், இதைத் தொடர்ந்து 'ஆடுபுலி', 'கந்தகோட்டை', 'தகராறு', 'காப்பான்', 'தலைவி' போன்ற பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.

ஆண்ட்டியை நம்பி போண்டியான நடிகர் கரண்..? சினிமா கேரியரை கோட்டை விட்ட கதையை புட்டு புட்டு வைத்த பயில்வான்!

அதிகப்படியான சர்ச்சைகளில் சிக்காத நடிகையான பூர்ணா,  கதாநாயகியாக நடிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தமிழில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், சாமர்த்தியமாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவு செய்தார். அதன் படி நடிகை பூர்ணா கடந்த ஆண்டு ஜூன் மாதம்,  துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆசிஃப் அலி என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அதன்பின் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வீடியோவை தனது யூடியூப் சேனல் மூலம் பகிர்ந்து நவம்பர் மாதம் அறிவித்தார் பூர்ணா.

AK62 : டுவிட்டரில் சைலண்டாக விக்னேஷ் சிவன் பார்த்த வேலையால் அஜித் ரசிகர்கள் குழப்பம்! என்ன இப்படி பண்ணிட்டாரு?

மேலும் கடந்த ஆண்டு, தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு... கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்த, இவருக்கு மிக பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.

இந்த வளைகாப்பு விழாவில், பூர்ணாவின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். பூர்ணாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாக, ரசிகர்களும் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

3வது வாரத்திலும் பல்வேறு திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகள்..! 300 கோடி வசூலை நெருங்கும் வாரிசு..!

தன்னுடை வளைகாப்பு நிகழ்ச்சியில்... பளபளக்கும் சிவப்பு நிற பட்டு புடவையில்... அதற்க்கு ஏற்ற போல் தங்க ஆபரணங்கள் அணிந்து, அழகு தேவதை போல் ஜொலிக்கிறார்.

அதே போல் அவருக்கு முன்பு... அவர் கையில் போடப்பட உள்ள வளையல்கள்... ஸ்வீட், பழங்கள், ட்ரை புரூட்ஸ் ஆவியாவை அழகிய கண்ணாடி பௌலில் வைக்கப்பட்டுள்ளது.

நடு இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரம்.. தாடி பாலாஜி மனைவி நித்யா செய்த மோசமான செயல்! கைது செய்த போலீஸ்!

தமிழ் - மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து திறமையான நடிகை என பெயர் எடுத்து விட்ட, நடிகை பூர்ணா, திருமணத்திற்கு பின்னர் முழுமையாக சினிமாவில் இருந்து விலகிய நிலையில், துபாயில் கணவருடன் குடியேறினார்.

எனினும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தன்னை பற்றியும், குடும்பத்தினரோடு எடுக்கும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவரின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகவே, ரசிகர்கள் அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை மழை போல் பொழிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!