இந்த சூழலில் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார் நிவேதா. அதில் அடையாறு சிக்னலில் தான் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த 8 வயது மதிக்கத்தக்க சிறுவன் தன்னிடம் பணம் கேட்டதாகவும். ஆனால் சும்மா பணம் தர முடியாது என்று அவர் கூறிய நிலையில், அந்தப் பையன் ஒரு புத்தகத்தை கொடுத்து, அதற்கு 100 ரூபாய் கேட்டதாகவும். அப்போது தான் 100 ரூபாய் எடுக்க முயன்ற பொழுது, எனக்கு 500 ரூபாய் தாருங்கள் என்று அந்த பையன் கேட்டதாகவும் நிவேதா கூறியுள்ளார்.