என் கனவு கதாபாத்திரத்தை கைப்பற்றிய ஐஸ்வர்யா ராய்..! பொறாமையில் பொங்கிய நடிகை மீனா..!

First Published Sep 29, 2022, 10:46 PM IST

நடிகை மீனாவின் கனவு கதாபாத்திரத்தை நடிகை ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்துள்ளது பொறாமையாக உள்ளது என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மீனா.
 

தன்னுடைய கணவர் இழப்பில் இருந்து மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு மீண்டு வருகிறார் மீனா. சமீபத்தில் கூட தன்னுடைய தோழியும், மேக்கப் ஆர்டிஸ்டுமான ரேணுகா ப்ரவீனுடன் டூர் சென்றபோது எடுத்த வீடியோக்கள் சில வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டது.

இவருடைய ரசிகர்கள் பலரும் விரைவாகவே மீனா தன்னுடைய துக்கத்தில் இருந்து மீண்டு, வெளியே வரவேண்டும் என கூறி வந்தனர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர்..  மீனா மிகவும் ஜாலி மூடில், ஐஸ்வர்யா ராய் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பொறாமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில், தன்னுடைய கனவு கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரம் குறித்தும், அதில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

அதாவது, ’பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்றுள்ள நந்தினி கதாபத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்றும், அந்த வாய்ப்பு ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்துள்ளது தனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

இப்படி நான் பொறுமை கொள்வது முதல் முறை என்று கூறியுள்ள மீனா, 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் - நடிகைகளுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மீனாவின் இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் ஐஸ்வர்யா ராய் போலவே நீங்களும் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

click me!