தமிழ் திரைப்படங்களில் "ஐயா" திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வளம் வந்து கொண்டிருக்கும் மாபெரும் நடிகை தான் நயன்தாரா. தமிழ் திரையுலகை பொருத்தவரை ஒரு படத்திற்கு சுமார் பத்து முதல் 12 கோடி ரூபாய் வரை இவர் சம்பளமாக வாங்குகிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கி, இந்த 19 ஆண்டுகளில் அவருடைய வளர்ச்சி என்பது விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது என்றே கூறலாம்.
ஆனால் அவருடைய இந்த திரையுலக பயணத்தில் பலமுறை சர்ச்சைகளையும் எதிர்கொண்டு இருக்கிறார் நயன்தாரா. முதல் முதலில் திரையுலகில் பிரபல நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா உடன் தான் கிசுகிசுக்களில் அடிபட தொடங்கினார் நயன்தாரா. ஒரு கட்டத்தில் நயன்தாராவுடன் நெருக்கமாக பிரபுதேவா பழகி வருவதன் காரணமாக, அது பிரபுதேவாவின் மனைவிக்கு மிகப்பெரிய பிரச்சனையானது என்றும். இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய முதல் மனைவியை பிரபுதேவா விவாகரத்து செய்ய காரணமே நயன்தாரா என்றும் பல செய்திகள் அப்பொழுது வெளியானது.
அதன் பிறகு பிரபல நடிகர் சிம்புவுடன் நயன்தாரா காதல் வயப்பட்டு இருப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. அது மட்டுமல்லாமல் அந்த சூழலில் வெளியான சிம்புவின் "வல்லவன்" திரைப்படத்தில் இருவரும் மிக நெருக்கமாக நடித்திருந்தாலும், அந்த வதந்திகளை உறுதி செய்தது. இப்படி எத்தனையோ பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ள நயன்தாரா. பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "குசேலன்" திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.