லவ் யூ அம்மு... ரவீந்தர் உடனானது காதல் திருமணமா?- கல்யாணத்துக்கு பின் நடிகை மகாலட்சுமி போட்ட முதல் பதிவு வைரல்

Published : Sep 02, 2022, 12:57 PM ISTUpdated : Sep 02, 2022, 01:47 PM IST

Ravindar Chandrasekaran : தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பின் நடிகை மகாலட்சுமி போட்டுள்ள இன்ஸ்டாகிரம் பதிவு வைரலாகி வருகிறது.

PREV
15
லவ் யூ அம்மு... ரவீந்தர் உடனானது காதல் திருமணமா?- கல்யாணத்துக்கு பின் நடிகை மகாலட்சுமி போட்ட முதல் பதிவு வைரல்

தமிழ் திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன்மூலம் ஏராளமான படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்ட நிலையில், நேற்று திடீரென சீரியல் நடிகை மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி கொடுத்தார் ரவீந்தர்.

25

நடிகை மகாலட்சுமிக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர் அனில் குமார் என்பவரை முதலாவதாக திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் இருந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன்பின் சீரியல் நடிகருடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்து வந்தன.

35

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார் நடிகை மகாலட்சுமி. இவர்களது திருமணம் நேற்று திருப்பதியில் நடைபெற்றது. திருமணம் முடிந்த உடனே தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்ட ரவீந்தர், மகாலட்சுமியே மனைவியாக வந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்... ரவீந்தரை திருமணம் செய்துள்ள.. சீரியல் நடிகை மஹாலட்சுமி முதல் கணவர் யார்? விவாகரத்துக்கு என்ன காரணம் தெரியுமா?

45

அதேபோல் திருமணம் பற்றி நடிகை மகாலட்சுமி போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவும் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: “உங்களை என் வாழ்வில் துணையாக பெற்றது எனது அதிர்ஷ்டம். உங்களது காதலால் என் வாழ்க்கை முழுமையடைந்துள்ளது. லவ் யூ அம்மு” என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்கள் என்பது தெரிகிறது.

55

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரவீந்தர் தயாரிப்பில் புதிதாக தொடங்கப்பட்ட “விடியும் வரை காத்திரு” என்கிற படத்தில் நடிகை மகாலட்சுமி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு தொடக்கத்தில் ரவீந்தர் தயாரிக்கும் ஆண்டவர் என்கிற படத்திற்கு வாழ்த்து தெரிவித்து மகாலட்சுமி பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் அப்போ 8 மாசமா ரகசியமா காதலிச்சுகிட்டு தான் இருந்தீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... என்ன ஒரு தாராள மனசு... படம் பிளாப் ஆனதால் சம்பளத்தை திருப்பிகொடுத்த அமீர்கான் - அதுவும் எத்தனை கோடி தெரியுமா?

click me!

Recommended Stories