சூர்யா - பாலாவின் வணங்கான்..சுவாரஸ்யம் பகிர்ந்த நாயகி கீர்த்தி ஷெட்டி

First Published Sep 17, 2022, 5:46 PM IST

நான் சந்தித்த மனிதர்களின் மிகவும் மரியாதைக்குரிய நபர் சூர்யா தான். வணங்கான் படபிடிப்பில் இருந்தது கனவு போல் இருந்தது என கூறியுள்ளார் கிருத்தி ஷெட்டி.

Vanangaan

சூர்யா எதற்கும் துணிந்தவன், படத்தை தொடர்ந்து கமலஹாசனின் விக்ரம் படத்தில் காமியோ ரோலில் தோன்றி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருந்தார். அதை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக் ஆகும் சூரரை போற்று படத்திலும் சிறப்பு தோற்றத்தில் வந்துள்ள இவர் தற்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் இணைந்துள்ளார். இதில் வாடிவாசல் படம் பல வருடங்களுக்கு முன்னதே அறிவிக்கப்பட்டது. 

ஆனால் திடீரென பாலாவுடன் கூட்டணி அமைத்துள்ளார் சூர்யா, பிதாமகன் ஆகிய இரு படங்கள் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்தது அதோடு நந்தா படம் சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்தது என்று கூறலாம். முன்னதாக சாக்லேட் பாயாக வலம் வந்த சூர்யாவை அதிரடி நாயகனாக மாற்றியது நந்தா தான்.

Vanangaan

தற்போது மூன்றாவது முறையாக இவர்களது கூட்டணி அமைந்துள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...கண்ணம்மாவை கொலைசெய்ய துணிந்த தீவிரவாதி..கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் டீம் 

Vanangaan

பாலா என்றாலே வித்தியாசமான கதைகளம் என்று பெயராகிவிட்ட நிலையில் தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் தான் சூர்யா வில்லனாக வேறு நடித்திருந்தார் என்பதால் அந்த படத்தில் வந்திருக்கும் அது போன்ற தோற்றத்தில் தான் இதிலும் தோன்றுவார் என்பதை படத்தின் போஸ்டர் மூலம் தெரிய வந்தது. கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடற்கரை சார்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் இதில் கீர்த்தி ஷெட்டி தமிழுக்கு அறிமுகம் ஆகிறார்.

மேலும் செய்திகளுக்கு... பிரபல ஹீரோயின்களுக்குள் சண்டை? மனமுடைந்து சீரியலை விட்டு விலகி ராதிகா 

Vanangaan

சூர்யாவின் 2டி இந்த படத்தை தயாரிக்கிறது. தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.  முதல் பார்வை தவிர மற்ற அப்டேட்டுகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் படம் குறித்த சுவாரஸ்சிய தகவல்களை நாயகி வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், நான் சந்தித்த மனிதர்களின் மிகவும் மரியாதைக்குரிய நபர் சூர்யா தான்.  வணங்கான் படபிடிப்பில் இருந்தது கனவு போல் இருந்தது என கூறியுள்ளார். 

click me!