அம்மாவாக போகும் நடிகை கயல் ஆனந்தி..! விரைவில் வளைகாப்பு..!

First Published Aug 13, 2021, 2:19 PM IST

நடிகை கயல் ஆனந்திக்கு இந்த வருடம் ஜனவரி மாதம் திருமணம் நடந்த நிலையில்... இவருக்கு விரைவில் வளைகாப்பு நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
 

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’கயல்’. இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகியவர் ஆனந்தி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அனைவராலும் 'கயல்' ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார். 

இந்த படத்தை தொடர்ந்து, ’சண்டிவீரன்’, ’திரிஷா இல்லைனா நயன்தாரா’, ’விசாரணை’, என வரிசையாக திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் ஆனந்திக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது ’பரியேறும் பெருமாள்’ திரைப்படம். ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்திலும் ஆனந்தியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதுவரை துளியும் கவர்ச்சி காட்டாமல்,  குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு, திடீர் என ஜனவரி 7 ஆம் தேதி இரகசிய திருமணம் நடந்து முடிந்தது.

கடந்த 4 வருடங்களாக இணை இயக்குனர் சாக்ரடீஸை காதலித்து வந்தத நிலையில், இரு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்த பிறகே திருமணம் நடந்துள்ளதாக தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது கயல் ஆனந்தி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து ஆனந்தியின் தரப்பில் இருந்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவரது திருமணம் எளிமையாக நடந்தாலும், வளைகாப்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். இந்த தகவல் தற்போது வெளியாகவே, ரசிகர்கள் பலர் கயல் ஆனந்திக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

click me!