அஜித், விஜய், விக்ரம், பிரசாந்த், என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகிய தேவயானி, சின்னத்திரையில் கவனம் செலுத்த துவங்கினார். இவர் சின்ன திரையில் நாயகியாக நடித்த கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆறு வருடங்களுக்கு மேல் இந்த சீரியல் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.