அட நம்ம அஞ்சலிக்கு கல்யாண கலை வந்துடுச்சி! பட்டு புடவையில்... கையில் மருதாணி வைத்து மனதை மயக்கும் நடிகை!

Published : Mar 22, 2023, 10:58 PM IST

நடிகை அஞ்சலிக்கு கடந்த சில மாதங்களாகவே, விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு பேச்சு அடிபட்டு வரும் நிலையில், தற்போது திருமண கோலத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
15
அட நம்ம அஞ்சலிக்கு கல்யாண கலை வந்துடுச்சி! பட்டு புடவையில்... கையில் மருதாணி வைத்து மனதை மயக்கும் நடிகை!

ஆந்திராவில் இருந்து வந்து, தமிழ் ரசிகர்களை தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர் தான் நடிகை அஞ்சலி. குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், இறைவி, போன்ற படங்கள், இவரின் நடிப்பு திறமைக்கு மகுடம் சூடிய படங்களாகவே உள்ளது.

25

இவர் அறிமுகமான போது, சில வெற்றிப்படங்களை கொடுத்த நாயகிகள் கூட திரையுலகில் இருந்து காணாமல் போன நிலையில், அஞ்சலி ஒரே பிரேக் எடுத்து கொண்டு ரீ-என்ட்ரி கொடுக்கும் போது கூட, தமிழ் ரசிகர்கள் இவரை வரவேற்க காத்திருக்கிறார்கள்.

பாராட்டுக்கு நன்றி எனச் 'சொல்ல மாட்டேன்'... நடிகர் கார்த்தியின் வாழ்த்துக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்!

35

அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வந்த அஞ்சலி, சில காதல் சர்ச்சைகள் மற்றும் ரிலேஷன் ஷிப்பில் இருந்ததால், தேடி வந்த வாய்ப்புக்ளை இழந்தார். இதுகுறித்து முதல் முறையாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றிலும் தெரிவித்திருந்த அஞ்சலி, தனக்கான ரிலேஷன் ஷிப், கேரியரை பாதித்ததால் அதில் இருந்து வெளியே வந்து விட்டதாகவ தெரிவித்தார்.

45

தற்போது மீண்டும் திரையுலகில் முழு கவனம் செலுத்தி வரும், அஞ்சலி... இயக்குனர் ஷங்கர் ராம் சரணை வைத்து இயக்கி வரும் RC 15 திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் ரோபோ ஷங்கர் துரும்பா இளைத்ததன் காரணம் என்ன? மனைவி கூறிய விளக்கம்..!

55

இந்நிலையில் அஞ்சலிக்கு திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அஞ்சலியும் திருமணத்திற்கு ஓகே சொல்லி விட்டதாகவும், விரைவில் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் ரசிகர்கள். இது ஒருபுறம் இருக்க நடிகை அஞ்சலி கல்யாண கலையுடன்... அழகிய பட்டுப்புடவை அணிந்து.... நகைகளுடன் கையில் மருதாணியோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!

Recommended Stories