இந்நிலையில் அஞ்சலி 'எங்கேயும் எப்போதும்' படத்தை தொடர்ந்து நடிகர் ஜெய்யுடன், 'பலூன்' படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் , இருவரும் லிவிங் - டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. இருவரும் சில இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்தது மட்டும் இன்றி, சூர்யா - ஜோதிகாவின் தோசை சேலஞ்சில் கூட ஒன்றாக சேர்ந்து செய்து ஆச்சர்யப்படுத்தினர். எனவே 2018 ஆம் ஆண்டே இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.