நடிகர் சங்க தேர்தல்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டது. இந்த தேர்தல் முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கைக்கு சென்னை ஐக்கோர்ட் தடை விதித்தது.
வாக்கு எண்ணிக்கை
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாண்டவர் அணி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது.
பாண்டவர் அணி வெற்றி
இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. மொத்த முள்ள 29 பதவிகளையும் அந்த அணியே கைப்பற்றியது. இதன்மூலம் நடிகர் விஷால் நடிகர் சங்கத்தில் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளர் ஆக வெற்றி பெற்றுள்ளார். இவர்களை எதிர்த்து போட்டியிட்ட சுவாமி சங்கரதாஸ் அணியினர் படுதோல்வி அடைந்தனர்.