30 வயதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொண்ட இளம் நடிகர்... முதல் படம் வெளியாகும் முன்பே எடுத்த சோகமான முடிவு...!

First Published Jul 8, 2020, 4:56 PM IST

பாலிவுட்டில் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் இருந்து திரைத்துறையினர் வெளிவருவதற்குள் இளம் நடிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்த தன் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷீல் கவுடா, அந்தபுரா என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
undefined
நடிகராக மட்டுமின்றி உடற் பயிற்சி மீது தீராத காதல் கொண்ட சுஷீல் சிக்ஸ் பேக் வைக்கும் அளவிற்கு உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்க கூடியவர்.
undefined
நேற்று சுஷீல் கவுடா நேற்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
undefined
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்த சுஷீல் கவுடா காவல்துறை அதிகாரியாக சலாகா என்ற படத்தில் நடித்திருந்தார்.
undefined
இந்த படத்தில் கன்னட உலகின் முன்னணி நடிகரான துனியா விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். சுஷீல் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ள துனியா விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
undefined
தனது முகநூல் பக்கத்தில் அவரை நான் முதலில் பார்க்கும் போது மிகப்பெரிய நடிகராக வருவார் என நினைத்தேன். படம் வெளியாவதற்கு முன்பே அவர் எங்களை விட்டுச்சென்று விட்டார். என்ன பிரச்சனைகள் இருந்தாலும் தற்கொலை தீர்வாகாது. தொடர் மரணங்கள் இந்த ஆண்டு முடிவடையாது என நினைக்கிறேன். கொரோனாவால் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
undefined
இளம் வயதிலேயே வாழ்க்கையை முடித்துக் கொண்ட சுஷீலை நினைத்து அவரது ரசிகர்கள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர்
undefined
click me!