suriya
சூர்யாவின் இறுதி வெளியீடாக எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பான இந்த படத்தில் சமீபத்திய சமூக இன்னல்களில் ஒன்றான பெண்கள் குறித்தான முக்கிய கருத்துகள் பேசப்பட்டு இருந்தது. படம் ரசிகர்களை நல்ல முறையில் சென்றடைந்தது.
suriya
தற்போது இவர் பாலாவுடன் வணங்கான், சிறுத்தை சிவா உடன் ஒரு படம், வெற்றிமாறனின் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வரும் வாடிவாசல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் படப்பிடிப்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூர்யா வரலாறு சார்ந்த ஒரு கதைக்களத்தை கையில் எடுத்து இருப்பதாக சமீபத்திய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
மேலும் செய்திகளுக்கு...துணிவு...வெல்வோம் சமுத்திரக்கனி போட்ட ட்விட்டால் உடைந்த அஜித் பட உண்மை
ponniyin selvan
தற்போது இவரது சகோதரர் கார்த்தி பொன்னியின் செல்வனில் மிக முக்கிய ரோலில் நடித்த வருகிறார். மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வம் வரும் 30-ம் தேதி வெளியாக உள்ளது. இதில் கார்த்தியின் ரோல் மிகவும் எதிர்பார்க்கத் தக்க வரலாற்று சுவை பொதிந்ததாக அமைந்துள்ளது. இந்நிலையில் மன்னர்கள் சார்ந்த கதைகளத்தை சூர்யாவும் கையில் எடுத்திருப்பது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் அழ்த்தியுள்ளது.