தொடர் வன்புணர்வு புகார்கள் மலையாள திரையுலகையே கலங்கடித்து வருகிறது. திலீப், விஜய் பாபுவை தொடர்ந்து தற்போது பிரபல நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். மலையாளம் , தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக இருப்பவர் நடிகர் ஸ்ரீஜித் ரவி. 46 வயதான நடிகர் கடந்த 4- ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பூங்காவின் அருகே தனது சொகுசு காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள் இருவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
24
Sreejith Ravi
14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் அருகில் காரை நிறுத்திய ஸ்ரீஜித் நிர்வாணமாக அவர்கள் முன் தோன்றி, ஆபாசமான வார்த்தைகளை பேசியதுடன், சிறுமிகளை தாக்கியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நடிகர் ஸ்ரீஜித் ரவியை கைது செய்துள்ளனர்.
இது முதல் முறையல்ல ஏற்கனவே ஸ்ரீஜித் கடந்த 2016-ம் ஆண்டு இது போன்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
34
sreejith ravi
70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீஜித் ரவி தமிழில் கும்கி, வேட்டை, மத யானை கூட்டம், கதகளி, ஆயிரத்தில் இருவர், அசுரவதம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அதோடு 60-க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் தோன்றியுள்ளார் ஸ்ரீஜித். இவர் பிரபல மலையாள நடிகர் டி.ஜி ரவியின் மகனாவார்.
முன்னதாக நடிகையை காரில் கடத்தி சென்று சித்ரவதைக்கு ஆளாக்கிய வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை தொடர்ந்து இளம் நடிகையை பாலியல் வன்புணர்வு செய்ததாக தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றுமொரு நடிகர் போக்சோவில் கைதாகியுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.