Sreejith Ravi
தொடர் வன்புணர்வு புகார்கள் மலையாள திரையுலகையே கலங்கடித்து வருகிறது. திலீப், விஜய் பாபுவை தொடர்ந்து தற்போது பிரபல நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். மலையாளம் , தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக இருப்பவர் நடிகர் ஸ்ரீஜித் ரவி. 46 வயதான நடிகர் கடந்த 4- ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பூங்காவின் அருகே தனது சொகுசு காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள் இருவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
Sreejith Ravi
14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் அருகில் காரை நிறுத்திய ஸ்ரீஜித் நிர்வாணமாக அவர்கள் முன் தோன்றி, ஆபாசமான வார்த்தைகளை பேசியதுடன், சிறுமிகளை தாக்கியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நடிகர் ஸ்ரீஜித் ரவியை கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..ழில் கொஞ்சும் அழகுடன்... பொன்னியின் செல்வனில் இளவரசி குந்தவையாக மிளிரும் திரிஷா - வைரலாகும் போஸ்டர்
இது முதல் முறையல்ல ஏற்கனவே ஸ்ரீஜித் கடந்த 2016-ம் ஆண்டு இது போன்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.