கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோபோ சங்கர் ஐந்து மாத காலமாக உடல்நிலை குறைவால் ரொம்பவே அவதிப்பட்டு வந்தார். இதனால் இவருடைய தோற்றம் சற்று மாறுபட்ட நிலையில் இருந்ததால் பல சர்ச்சைகளில் இவருடைய பெயர் அடிபட்டு வந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோபோ சங்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, உடல் எடை குறைந்து மெலிதாக காணப்பட்டார். மஞ்சள் காமாலை ஏற்பட்டு அவர் படுத்த படுக்கையாக ஆகிவிட்டார். மீண்டும் அவர் பிழைப்பதே கஷ்டம் என அனைவரும் பேசிய நிலையில், அதில் இருந்து மீண்டு வந்த தனது மகள் இந்திரஜாவின் திருமணத்தை அனைவரும் பார்த்து வியந்து போகும் அளவிற்கு அம்பானி வீட்டு கல்யாணம் போல நடத்தினார்.
ரோபோ சங்கர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்த நிலையில், தான் பட்ட கஷ்டம் மற்றவர்கள் யாரும் படக்கூடாது என்ற எண்ணத்தில் மீடியா முன் எல்லா உண்மையை போட்டு உடைத்தார். ‘‘எந்த ஒரு விஷயமும் தனக்கு வந்தால் தான் காய்ச்சலும் தலைவலியும் தெரியும் என்பது போல பட்ட பின்பு தான் இவருக்கு புத்தி தெரிந்திருக்கிறது. போதை என்பது தவறான ஒரு பாதை. அதற்கு முன் உதாரணமாக உங்கள் அனைவரது முன்னாடியும் நான் அவஸ்தைப்பட்டு அதிலிருந்து தற்போது மீண்டு வந்திருக்கிறேன்.