நடிகர் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பிரஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கார்த்தி, ஷூட்டிங்கின் போது நடந்த விஷயம் ஒன்றை கூறினார்.
ஆங்காங்கே இடிந்து மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது அந்த பள்ளி. இதையடுத்து அதே பகுதியில் இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வரும் தனது நண்பன் மற்றும் அருகில் உள்ள சில செல்வந்தர்கள் உதவியுடன் கார்த்தி சூர்யா நடத்தி வரும் அகரம் பவுண்டேஷனும் இணைந்து அந்த பள்ளியை சீரமைக்கும் பணியில் இறங்கி உள்ளது.
அவர்களின் உதவியால், சிதிலமடைந்து கிடந்த அந்த பள்ளி இன்று சூப்பராக மாறி இருக்கிறது. இதனை செய்துகொடுத்த கார்த்தி மற்றும் அவரது நண்பர்களுக்கு அந்த பள்ளி நிர்வாகத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனர். இதையடுத்து பேசிய கார்த்தி, அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டாலும் அது சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சரியான வகையில் சென்று சேருவதில்லை என கூறினார்.