மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஜெயராம். இவர் தமிழிலும் தெனாலி, பஞ்சதந்திரம், துப்பாக்கி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயராம்.
24
நடிகர் ஜெயராம் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூரில் வசித்து வருகிறார். அங்கு இவருக்கு சொந்தமான மாட்டுப்பண்ணையும் உள்ளது. சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாட்டுப்பண்ணையில் 60க்கும் மேற்பட்ட மாடுகளை பராமரித்து வருகிறார் ஜெயராம். இதுதவிர விவசாயமும் செய்து வருகிறார் ஜெயராம்.
சமீபத்தில் கேரள மாநில விவசாயத்துறை சார்பில் விவசாய தின விழா நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட இந்த விழாவில் சிறந்த விவசாயிக்கான விருது நடிகர் ஜெயராமுக்கு வழங்கப்பட்டது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கையால் இந்த விருதுகளை பெற்றுக்கொண்டார் நடிகர் ஜெயராம். இந்த விழாவில் ஜெயராமின் விவசாய பணிகளுக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.
44
இந்த விழாவில் பேசிய நடிகர் ஜெயராம், பத்ம ஸ்ரீ விருதை விட இந்த விவசாயி விருது கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் முதல்வர் கையால் விருது பெற்றபோது எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.