முதல்வர் கையால் சிறந்த விவசாயி விருது... நடிப்பை போல் விவசாயத்திலும் சாதித்து காட்டிய நடிகர் ஜெயராம்

First Published Aug 19, 2022, 12:15 PM IST

Actor jayaram : கேரள மாநில விவசாயத்துறை சார்பில் நடத்தப்பட்ட விவசாய தின விழாவில் நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயிக்கான விருது வழங்கப்பட்டது. 

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஜெயராம். இவர் தமிழிலும் தெனாலி, பஞ்சதந்திரம், துப்பாக்கி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயராம்.

நடிகர் ஜெயராம் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூரில் வசித்து வருகிறார். அங்கு இவருக்கு சொந்தமான மாட்டுப்பண்ணையும் உள்ளது. சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாட்டுப்பண்ணையில் 60க்கும் மேற்பட்ட மாடுகளை பராமரித்து வருகிறார் ஜெயராம். இதுதவிர விவசாயமும் செய்து வருகிறார் ஜெயராம்.

இதையும் படியுங்கள்... அடிக்கடி மும்பைக்கு விசிட் அடிக்கும் சூர்யா... பின்னணியில் இருக்கும் ரூ.200 கோடி பிசினஸ் பற்றி தெரியுமா?

சமீபத்தில் கேரள மாநில விவசாயத்துறை சார்பில் விவசாய தின விழா நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட இந்த விழாவில் சிறந்த விவசாயிக்கான விருது நடிகர் ஜெயராமுக்கு வழங்கப்பட்டது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கையால் இந்த விருதுகளை பெற்றுக்கொண்டார் நடிகர் ஜெயராம். இந்த விழாவில் ஜெயராமின் விவசாய பணிகளுக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன. 

இந்த விழாவில் பேசிய நடிகர் ஜெயராம், பத்ம ஸ்ரீ விருதை விட இந்த விவசாயி விருது கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் முதல்வர் கையால் விருது பெற்றபோது எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... பிருத்விராஜ் முதல் கவுதம் மேனன் வரை... தளபதி 67-ல் மிரட்ட உள்ள 6 மாஸ் வில்லன்களின் லிஸ்ட் இதோ..!

click me!