அதன்படி பிரபல YouTuber ஷா ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். முதலில் ஜெயம் ரவி தான் தன்னை அழைத்து பல விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்று கூறியதாகவும். அதற்கு, நீங்கள் சொல்ல வேண்டியதை என் மூலம் சொல்வதைக் காட்டிலும், நேரடியாக உங்கள் சமூக வலைதள பக்கங்களின் மூலம் சொல்லினால் மக்களுக்கு இன்னும் தெளிவாக புரியும் என்று தான் கூறியதாகவும். ஆனால் அவர் வெளியிடும் வீடியோக்களை அவருடைய மகன்களும் பார்க்கக்கூடும். அவர்களுடைய தாய் பற்றி நான் பேசும் எதுவும் அவர்களுக்கு தெரியக்கூடாது. இதனால் தான் நான் மாற்று ஊடகங்கள் மூலம் எங்களுக்கு இடையே நடந்த விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று ஜெயம் ரவி கூறியதாக யூடியூபர் ஷா தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்ட தகவல்கள் பின்வருமாறு...
"ஆர்த்தியுடனான இந்த பிரிவு முடிவுக்கு முன்னதாக, எனது இரண்டு மகன்களில் மூத்த மகனிடம், நான் உங்களுடைய அம்மாவை பிரியப்போகிறேன் என்று கூறினேன். நான் பேசியதை புரிந்து கொண்ட என் மகன், உன்னுடைய சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம், ஆனால் நீங்கள் இணைந்திருந்தால் எனக்கு ரொம்பவும் சந்தோஷம் என்று கூறினான். அவனை சமாதானப்படுத்தும் வகையில் பேசிய நான், இது எல்லாம் கொஞ்சம் காலத்திற்கு தான், பிறகு எல்லாமே சரியாகிவிடும். உங்களை நான் பார்க்காமல் இருக்கவே மாட்டேன் என்று கூறினேன்".