பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக மிக நேர்த்தியாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சியான் விக்ரம். அந்த பட பணிகள் மற்றும் ப்ரோமோஷன் பணிகள் முடிந்த உடனேயே பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்பட படப்பிடிப்பு பணிகளில் இறங்கினார் விக்ரம்.
தான் நடிக்கும் அனைத்து திரைப்படங்களுக்குமே தன் முழு உழைப்பையும் அளித்து நடிக்கும் ஒரு சிறந்த நடிகர் அவர் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் பல கஷ்டமான தருணங்களை கடந்து, விலா எலும்பில் ஏற்பட்ட முறிவோடு சில காலம் ஓய்வு பெற்று, மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து தற்பொழுது அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : வடிவேலுவை நாயகனாக வைத்து மாரி செல்வராஜ் செய்ய உள்ள அடுத்த சம்பவம்!