தனித்திறமையால் ரசிகர்களை ஈர்த்த சீயான்..மகுடம் சூடிய படங்களின் லிஸ்ட் !

First Published Jul 8, 2022, 5:01 PM IST

கென்னடி ஜான் விக்டர் என்னும் இயற்பெயரை கொண்ட விக்ரம் 1990-ம் ஆண்டு என் காதல் கண்மணி என்னும் படம் மூலம் அறிமுகமானார். இவரும் காதல் நாயகனாகவே என்ட்ரி கொடுத்தார். பின்னாட்களில் இவர் வெற்றி குறித்து பார்க்கலாம்..

vikram

90 களின் தொடக்கத்தில் என் காதல் கண்மணி மூலம் எண்ட்ரியான இவர்,தந்து விட்டேன் என்னை,, காவல் கீதம், மீரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் துருவம் என்னும் படத்தின் மூலம் மலையாளத்திலும் இதையடுத்து தெலுங்கிலும் அறிமுகமானார். இரு வருடங்களுக்கு பிறகு  விக்ரம் மீண்டும் புதிய மன்னர்கள் மூலம் தமிழுக்கு வந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது.


 மீண்டும் மற்றுமொழி  பாதைக்கு திரும்பிய விக்ரம் 1997 ஆம் ஆண்டு உல்லாசம் என்னும் படத்தில் நடித்தார்.  பின்னர் மூன்று தமிழ் படங்களிலும் மலையாளம் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் தான் சேது. பாலா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்தார் விக்ரம். இரண்டாம் பாதியில் சியான் விக்ரமின் நடிப்பு பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தி இருந்தது. இந்த படத்திற்காக விருதையும் வென்றுள்ளார் விக்ரம்.

vikram

 மீண்டும் வித்தியாசமான கதைகளத்தை தேர்வு செய்த விக்ரம் 2001 ஆம் ஆண்டு காசி என்னும் படத்தில் நடித்தார். இந்த படத்தை விநாயகம் என்பவர் இயக்கி இருந்தார். மாற்றுத்திறனாளியாக சீயான் நடித்து இவரது ரசிகர்களை  மட்டுமல்லாமல் மற்ற சினிமா பிரியர்களின் மனங்களையும் கொள்ளையடித்து விட்டார்.

தொடர் வெற்றியால்  தமிழிலேயே செட்டில் ஆகிவிட்ட இவர் ஜெமினி, சாமுராய், கிங், தூள், சாமி என அடுத்தடுத்த ஆக்ஷன் படங்களில் நடித்தார். பின்னர் பிதாமகன் என்னும் மாபெரும் படத்தில் நடித்தார். இந்த படத்தை சேது இயக்குனர் பாலா தான் இயக்கி இருந்தார். இதற்காக  தேசிய விருதையும் வென்றார் நடிகர் விக்ரம். இதற்குப் பின்பு அவரது படங்கள் பெரும்பாலும் வெற்றியை மட்டுமே ருசித்தன.

vikram

அந்நியன் இன்றும் நீங்காத நினைவில் நிற்கும் நடிப்பு. ஒரே உருவத்திற்குள் மூன்று ஆன்மாக்கள் என்பது போல  அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் விக்ரம். ராமானுஜம், ரெமோ. அந்நியன் என சாதுவாகவும், ரொமான்டிக்காகவும், அதிரடியாகவும் நடித்து அசத்தியிருந்தார்., இந்தப் படத்திற்காக ஃபிலிம் ஃபேர் அவார்டை வென்றார் விக்ரம்.

மேலும் செய்திகளுக்கு..ஸ்மைலிங் குயின் சாய்பல்லவி..கன்னம் சிவக்க..விதவிதமான போஸ்!

மிதமான வெற்றிகளை பெற்ற சில படங்களுக்குப் பிறகு கந்தசாமி இவருக்கு நல்ல திருப்பு முனையாக இருந்தது. இதில் சூப்பர் ஹீரோவாக நடித்திருந்தார் விக்ரம். வித்தியாசமான தோற்றமணிந்து கொள்ளையடிப்பவராக இவர் நடித்திருந்தது நல்லவரவேற்பை  பெற்றது.

vikram

அடுத்த மாறுபாடு என்றால் தெய்வத்திருமகள் தான் மனநலம் குன்றிய ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானால் எப்படி இருக்கும் எனும் வித்தியாசமான கதைகளத்தில்  தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்திருந்தால் சியான்.

மேலும் செய்திகளுக்கு..Heart Attack for Actor Vkram : நடிகர் விக்ரமுக்கு திடீர் மாரடைப்பு...அவசர சிகிச்சையில் அனுமதி!

 இதன் பிறகு அடுத்தடுத்த படங்கள் விமர்சன ரீதியில் எதிர்மறையான எண்களை மட்டுமே பெற்றிருந்த போதிலும் இவருக்கு இருமுகன் நல்ல பெயரை பெற்று கொடுத்தது என்றே கூறலாம். இதில் நயன்தாரா நாகியாக நடித்திருந்தார் அதோடு விக்ரம் இரு வேடத்தில் நடித்திருந்தார். அகிலனாகவும், டாக்டர் லவ்வாகவும் நடித்து அசத்தி ரசிகர்களின் மனங்களை வென்றெடுத்தார்

vikram

மீண்டும் ஹரியின் இயக்கத்தில் சாமி ஸ்கொயர் அதாவது சாமி இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். ஆனால்  முந்தைய பாகம் போல இந்த பாகம் போதுமான வரவேற்பை பெறவில்லை. இதற்கு அடுத்து கமலின் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படமும் போதுமான வரவேற்பு இல்லை. பின்னர் ஆதித்ய வர்மா, மகான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த படங்களும் மிதமான வெற்றியை மட்டுமே கண்டன.

மேலும் செய்திகளுக்கு..இந்த வருடத்தில் வெற்றி வாகை சூடிய முன்னணி நாயகர்களின் படங்கள் குறித்த தொகுப்பு!

தற்போது விக்ரம்  கோப்ராவிலும், பொன்னியின் செல்வனில் ஆதித்ய வர்மாவாகவும் நடித்து வருகிறார்.  இதில் ஆதித்ய வர்மன் ரோல் குறித்த எதிர்பார்ப்பு அவர் போஸ்டர் வெளியாகிய பின்னர் அதிகரித்துள்ளது.

click me!