அப்போது அவர் பேசுகையில், அப்பா தமிழன் என்றும் அம்மா சிந்தி எனவும் கூறினார். தனது தாய் கராச்சியில் வசித்து வந்ததாகவும் பிரிவினையின்போது அவர் இந்தியாவுக்கு வந்துவிட்டதாகவும் கூறினார். இதையடுத்து கொல்கத்தாவில் இருவருக்கு திருமணம் ஆனதாகவும், தந்தைக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் கிடைத்ததன் காரணமாக கான்பூர், லக்னோ, ஐதராபாத் என பல்வேறு இடங்களில் வசித்து வந்ததாகவும், இறுதியில் தமிழ்நாடு வந்து இங்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும் கூறினார்.