விஐபி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், படையப்பா, ஹேராம், மின்னலே, ஆனந்தம், பம்மல் கே சம்மந்தம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த அப்பாஸ், தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்தார். சினிமா ஒருவரை எந்த அளவுக்கு உச்சத்துக்கு கொண்டு செல்லுமோ, அதே அளவு சறுக்கலையும் கொடுக்கும். அதற்கு அப்பாஸே ஒரு உதாரணம். தொடர்ந்து அவர் நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் ஆளே அட்ரஸ் இல்லாமல் போனார் அப்பாஸ்.
சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு சென்று செட்டில் ஆன அப்பாஸ், அதன்பின் சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அப்பாஸ், சினிமாவை விட்டு விலகிய பின்னர் தான் எதிர்கொண்ட கஷ்டங்கள் பற்றி மனம்விட்டு பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் நெஞ்சில் டாட்டூ குத்திய பிக்பாஸ் ரக்ஷிதா! என்ன போட்டுருக்காங்க பாருங்க!