பிரஷாந்துடன் 22 வருடங்களுக்கு பின் ஜோடி சேரும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்..?

First Published Oct 13, 2020, 6:46 PM IST

நடிகை ஐஸ்வர்யா ராய் கிட்ட தட்ட 22 வருடங்களுக்கு பின், ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் திட்டமிட்டிருந்தார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.
undefined
பிரசாந்த் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை, மோகன்ராஜா இயக்க உள்ளதாக ஏற்கனவே தங்கள் வெளியானது.
undefined
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ’பொன்மகள்வந்தாள்’ திரைப்படத்தை இயக்கிய பெடரிக் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
undefined
இந்த நிலையில் ’அந்தாதூன்’ படத்தில் தபு நடித்த கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளதாக சில செய்திகள் வெளியாகியுள்ளது.
undefined
ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் கடந்த 1998ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார்.
undefined
இதை தொடர்ந்து, தற்போது 22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ’அந்தாதூன்’ ரீமேக்கில் பிரசாந்துக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.
undefined
ஒரு ஹிட் படத்தை கொடுக்க பல வருடங்களாக போராடி வரும், பிரஷாந்த் இந்த படத்தின் மூலம் விட்ட இடத்தை பிடிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
undefined
click me!