நீங்கள் தவறான நபர்களுக்குப் பணம் அனுப்பினாலோ, அல்லது அனுப்ப வேண்டியதை விட அதிகப் பணம் அனுப்பினாலோ என்ன செய்ய வேண்டும்? UPI பரிவர்த்தனைகளை மேற்பார்வையிடும் NPCI (National Payments Corporation of India) விதிகள் என்ன சொல்கின்றன? - முதலில், வங்கியில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம். - NPCI குறை தீர்க்கும் போர்டல் மூலம் நீங்கள் புகார் பதிவு செய்யலாம். NPCI-யின் 'Dispute Redressal Mechanism' மூலம் 1800-120-1740 என்ற டோல்-ஃப்ரீ எண்ணுக்கும் புகார் அளிக்கலாம். - பரிவர்த்தனைக்கான ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். - விசாரணைக்குப் பிறகு, பணம் தவறுதலாகச் சென்றுள்ளது என்று தெரிந்தால், அதை மீட்கும் செயல்முறை தொடங்கும். - NPCI விதிகளின்படி, மாதத்தில் 10 முறை மட்டுமே தவறாக அனுப்பிய பணத்தைத் திரும்பப் பெற முயற்சிக்க முடியும். அதேபோல, ஒரே நபருக்கு 5 முறைக்கு மேல் தவறாகப் பணம் அனுப்பினால், பணம் திரும்பக் கிடைக்காது.
RBI ஆம்புட்ஸ்மேனை அணுகலாமா?
வங்கி அல்லது UPI சேவை வழங்குநரிடம் புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், RBI-யின் 'Integrated Ombudsman Scheme' கீழ் புகார் செய்யலாம். இதற்கு, முதலில் வங்கியில் புகார் செய்து 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்காமல் இருந்திருக்க வேண்டும்.
பணம் திரும்ப வர எவ்வளவு காலம் ஆகும்?
புகார் மற்றும் விசாரணையைப் பொறுத்து, சில நாட்களில் தீர்வு கிடைக்கலாம். சில சிக்கலான வழக்குகளில் சில வாரங்கள் ஆகலாம். பரிவர்த்தனை விவரங்களை நீங்கள் சரியாகக் கொடுத்தால், செயல்முறை வேகமாக நடக்கும்.
90% பேருக்கு இந்த ரகசியம் தெரியாது! சாதாரண மனிதனை கோடீஸ்வரனாக்கும் 70/30 விதி!