Daily Savings: தினமும் வெறும் 50 ரூபாய் முதலீடு செஞ்சா போதும், லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜோடு சேர்த்து, மெச்சூரிட்டி சமயத்துல சுமார் 35 லட்சம் ரூபாய் வரைக்கும் லாபம் பார்க்கலாம்.
சம்பாதிக்கிறது எவ்வளவு முக்கியமோ, அதை சரியா சேமிக்கிறது அதைவிட முக்கியம். இந்த கான்செப்ட்டில் தபால் துறை கொண்டு வந்துள்ள திட்டம்தான் 'கிராம் சுரக்ஷா யோஜனா'. இதில் தினமும் வெறும் 50 ரூபாய் முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் 35 லட்சம் ரூபாய் வரை பெறலாம். உங்கள் பணம் 100% பாதுகாப்பாக இருக்கும்.
25
இந்த சூப்பர் திட்டத்தில் யார் சேரலாம்?
இந்திய குடிமகனாக இருந்து, உங்கள் வயது 19 முதல் 55 வயதுக்குள் இருந்தால் போதும், இந்த திட்டத்தில் சுலபமாக சேரலாம். குறைந்தபட்ச உத்தரவாதத் தொகை ₹10,000. அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெற முடியும். நடுத்தர வர்க்கத்தினரை மனதில் வைத்து இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
35
உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற பிரீமியம் ஆப்ஷன்கள்
தினமும் ₹50 வீதம், மாதத்திற்கு சுமார் ₹1,500 முதலீடு செய்ய வேண்டும். ஆனால், இந்த பிரீமியத்தை உங்கள் வசதிக்கு ஏற்ப மாதம், மூன்று மாதங்கள் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என கட்டிக்கொள்ளும் ஆப்ஷன்கள் உள்ளன. இதனால் பட்ஜெட் டென்ஷன் இல்லாமல் சேமிக்கலாம்.
திட்டத்தில் சேர்ந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவசரத் தேவைக்கு கடன் பெறும் வசதி உள்ளது. ஒருவேளை பாலிசியை தொடர முடியாவிட்டால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதை சரண்டர் செய்யலாம். ஐந்து ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்தால், பாலிசிக்கு நல்ல போனஸும் கிடைக்கும்.
55
இன்ஷூரன்ஸ் மற்றும் கேரண்டி வருமானம்
பாலிசிதாரருக்கு 80 வயது ஆன பிறகு, இந்த பாலிசி மெச்சூர் ஆகும். அப்போது முழுத் தொகையும் கையில் கிடைக்கும். பாதுகாப்பான முதலீடு, ஆயுள் காப்பீடு, நல்ல வருமானம் என மூன்றும் கிடைப்பதால், கிராமப்புறங்களில் இந்த 'கிராம் சுரக்ஷா யோஜனா' திட்டம் பிரபலமாக உள்ளது. ரிஸ்க் இல்லாத வருமானம் விரும்புவோருக்கு இது ஒரு பெஸ்ட் சாய்ஸ்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.