Bank Strike : பண்டிகைக் காலத்திற்கு முன் வங்கி ஊழியர்கள் சங்கம் செப்டம்பரில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம்; எனினும் ஏடிஎம்-களில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU), பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் மாதம் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. இப்போராட்டத்தின் காரணமாக வங்கிப் பண பரிவர்த்தனைகள், கிளைச் சேவைகள் மற்றும் காசோலை பரிமாற்றங்கள் முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது. மேலும், ஏடிஎம் இயந்திரங்களில் உடனடியாகப் பணம் நிரப்பப்படாமல் போவதால், பொதுமக்களுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு கடுமையான சிரமங்கள் உண்டாக வாய்ப்புள்ளது.
இந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பின்படி, செப்டம்பர் மாதம் மொத்தம் நான்கு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், குறிப்பிட்ட நாட்களில் வங்கி கிளைகளில் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
வங்கி ஊழியர் சங்கங்கள் பல வருஷமா பல கோரிக்கைகளை முன்வைச்சு போராடிட்டு வராங்க. அந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணவே, செப்டம்பர்ல இந்த வேலைநிறுத்த முடிவை எடுத்திருக்காங்க. UFBU-ன் கீழ் உள்ள பல சங்கங்கள் இதில் பங்கேற்க உள்ளன.
வங்கி வேலைநிறுத்தம் நடந்தால், வங்கிக் கிளைக்குச் சென்று பணம் போடுவது, எடுப்பது, செக் பரிவர்த்தனைகள், டிராஃப்ட் எடுப்பது போன்ற சேவைகள் பாதிக்கப்படலாம். அதனால், செப்டம்பரில் வங்கி வேலைகள் இருந்தால், முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.
வேலைநிறுத்தம் அறிவிச்ச உடனே வாடிக்கையாளர்களுக்கு வர்ற முதல் கேள்வி ஏடிஎம் சேவை பத்திதான். வங்கிக் கிளைகள் மூடி இருந்தாலும், ஏடிஎம் சேவை முழுசா முடங்காது.
ஆனா, வேலைநிறுத்தத்தோட தாக்கம் ஏடிஎம்-ல பணம் நிரப்புறது, பராமரிப்பு பணிகள்ல தெரியவரும். இதனால சில இடங்கள்ல ஏடிஎம்-ல பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் சிரமப்பட நேரிடலாம்.
ஏடிஎம் சேவை எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பது சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் சேவை நிறுவனங்களின் நிர்வாகத்தைப் பொறுத்தது. அதனால், வேலைநிறுத்த நாட்களுக்கு முன்பே தேவையான பணத்தை எடுத்து வைப்பது புத்திசாலித்தனம்.
வங்கி வேலைநிறுத்தத்தால் கிளை சேவைகள் பாதிக்கப்பட்டாலும், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற டிஜிட்டல் சேவைகள் வழக்கம் போல் இயங்கும். UPI, NEFT, RTGS போன்ற சேவைகளும் பெரும்பாலும் கிடைக்கும்.
இதோடு முடியல. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பண்டிகை மாதமான அக்டோபரிலும் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்னு UFBU எச்சரித்துள்ளது. இதனால் வங்கிச் சேவைகள் மீது மீண்டும் ஒரு நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது.
பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மக்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும். சம்பளம், பென்ஷன், ஷாப்பிங், பில் கட்டுவது என பல தேவைகளுக்கு வங்கிகளை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். அக்டோபரிலும் ஸ்டிரைக் நடந்தால், மக்களின் சிரமம் அதிகமாகும்.
எனவே, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்கி தொடர்பான வேலைகள் இருந்தால், வேலைநிறுத்த தேதிகளைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே முடித்துக்கொள்வது நல்லது. உங்கள் வங்கியின் அறிவிப்புகளையும் தொடர்ந்து கவனியுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.