Post Office Scheme : சேமிப்பை ஆபத்து இல்லாமல் இரட்டிப்பாக்கலாம்! மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் மூலம் முதலீட்டை முழு உத்தரவாதத்துடன் இரட்டிப்பாக்க முடியும். பாதுகாப்பான லாபகரமான சேமிப்பு இது!
ஷேர் மார்க்கெட் அபாயங்களைத் தவிர்க்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, போஸ்ட் ஆபீஸின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம் மிகச் சிறந்த தேர்வாகும். மத்திய அரசின் முழுமையான உத்தரவாதம் இருப்பதால், முதலீடு செய்யும் தொகைக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தற்போது இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 7.5% வட்டி லாபம் பெறலாம்.
இந்த திட்டத்துல நீங்க போடுற பணம் 115 மாசத்துல, அதாவது சுமார் 9 வருஷம் 7 மாசத்துல இரட்டிப்பாகிடும். மார்க்கெட் ஏற்ற இறக்கம் பத்தி கவலையே வேண்டாம். உதாரணமா, நீங்க ₹5 லட்சம் முதலீடு செஞ்சா, மெச்சூரிட்டி முடியும்போது ₹10 லட்சம் உங்க கைக்கு வரும்.
இந்தியாவில் இருக்குற 18 வயசுக்கு மேலான யார் வேணும்னாலும் இந்த திட்டத்துல ஈஸியா முதலீடு செய்யலாம். தனியாவோ அல்லது ரெண்டு பேர் சேர்ந்தோ ஜாயின்ட் அக்கவுன்ட் திறக்கலாம். குறைஞ்சபட்சம் ₹1000-ல இருந்து ஆரம்பிக்கலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு எந்த லிமிட்டும் இல்லைங்கிறதுதான் இதுல ஹைலைட்.
இந்த திட்டத்துல போடுற பணத்துக்கு 100% அரசாங்க உத்தரவாதம் இருக்கு. அதனால பாதுகாப்பு பத்தி யோசிக்கவே வேணாம். நாமினேஷன் வசதியும் இருக்கு. ஒரு போஸ்ட் ஆபீஸ்ல இருந்து இன்னொரு பிராஞ்சுக்கு கணக்கை மாத்திக்கவும் முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.