தமிழ்நாடு அரசு, சுயதொழில் தொடங்க விரும்புவோருக்காக 50% மானியத்தில் 2 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. கிராமப்புற மக்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிலையான வருமானம் ஈட்டலாம்.
இன்றைய காலகட்டத்தில் அரசு வேலைக்கு இணையாக சுயதொழில் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது. குறைந்த முதலீட்டில் நிலையான வருமானம் ஈட்டும் வழிகளை பலரும் தேடி வருகின்றனர். குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் தங்களுக்கென ஒரு தொழிலைத் தொடங்கி பொருளாதார முன்னேற்றம் அடைய விரும்புகின்றனர். இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது 50 சதவீத மானியத்தில் தொழிலைத் தொடங்கும் அரிய வாய்ப்பை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
27
50% மானியத்தில் தொழில் தொடங்கும் வாய்ப்பு
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 250 நாட்டுக்கோழிகள் கொண்ட பண்ணையை அமைப்பதற்கு அரசு 50 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு செலவு ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலையில், அதில் சுமார் ரூ.1.65 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை மானிய உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த மானியத்தின் மூலம் தொழில் தொடங்க விரும்புவோரின் நிதிச்சுமை குறைவதுடன், சொந்தமாக வருமானம் ஈட்டும் வாய்ப்பும் உருவாகிறது.
37
திட்டத்தின் கீழ் கிடைக்கும் வசதிகள்
இந்தத் திட்டத்தில் கோழிக்குஞ்சுகள் மட்டுமல்லாமல், தொழில் தொடங்க தேவையான அடிப்படை வசதிகளும் வழங்கப்படுகின்றன. 4 வார வயதுடைய 250 நாட்டுக்கோழி குஞ்சுகள், கோழி வளர்ப்பு கொட்டகை அமைப்பதற்கான உதவி, தீவனத் தட்டு, குடிநீர் பாத்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் ஆரம்ப காலத்திற்குத் தேவையான தீவன வசதிகளும் இதில் அடங்கும். இதனால் புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு ஆரம்ப முதலீட்டு சுமை குறைகிறது.
கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுயதொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக பெண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.மேலும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் மற்றும் அடிப்படை அறிவு கொண்டவர்களுக்கு தேர்வில் கூடுதல் வாய்ப்பு கிடைக்கலாம்.
57
ஏன் நாட்டுக்கோழி வளர்ப்பு லாபகரமான தொழில்?
நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு சந்தையில் தொடர்ந்து அதிக தேவை உள்ளது. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மக்கள் அதிகம் விரும்பத் தொடங்கியுள்ளதால் நாட்டுக்கோழி பொருட்களின் விலையும் உயர்ந்தே காணப்படுகிறது.
நாட்டுக்கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவை என்பதால் பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும். அதே நேரத்தில் இறைச்சி, முட்டை மற்றும் குஞ்சுகள் விற்பனை மூலமாக பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்ட முடியும்.
67
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்
இந்தத் திட்டத்தில் சேர விரும்புவோர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் தொழிலை மேற்கொள்ள தேவையான இட வசதி மற்றும் ஆர்வம் இருக்க வேண்டும். மாவட்ட அளவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அடையாள அட்டை, முகவரி சான்று, வங்கி கணக்கு விவரங்கள், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் விண்ணப்பத்தின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
குறைந்த முதலீட்டில் சொந்த தொழிலைத் தொடங்கி நீண்டகால வருமானம் பெற விரும்புபவர்களுக்கு இந்த 50% மானிய நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் சிறந்த வாய்ப்பாக உள்ளது. அரசின் மானிய உதவியுடன் தொழிலைத் தொடங்குவதால் நிதி அபாயம் குறைவதோடு, எதிர்காலத்தில் நிலையான வருமானத்தையும் உருவாக்க முடியும். சுயதொழிலில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவு இருந்தால், இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.