ஸ்டேட் வங்கி (SBI) தொடர் வைப்பு நிதித் திட்டம், மாதம் ஒரு சிறிய தொகையைச் சேமிப்பதன் மூலம் லட்சங்களில் நிதி திரட்ட உதவுகிறது. இத்திட்டம் 7.05% வரையிலும் வட்டி வழங்கி, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.
சாதாரண குடிமக்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், சிறிய அளவிலான மாதாந்திர சேமிப்பை ஒரு பெரிய நிதியமாக மாற்ற உதவுகிறது.
24
திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
இந்தத் திட்டம் ஒரு தொடர் வைப்பு நிதி (Recurring Deposit) முறையாகும். அதாவது, ஒவ்வொரு மாதமும் உங்கள் வருமானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, நீங்கள் மாதம் ரூ. 610 வீதம் 10 ஆண்டுகளுக்குச் சேமித்து வந்தால், முதிர்வு காலத்தில் உங்கள் கையில் ரூ. 1 லட்சம் இருக்கும்.
இதேபோல் உங்கள் இலக்கை உயர்த்தி மாதம் அதிக தொகையைச் சேமிப்பதன் மூலம் ரூ. 2 லட்சம், ரூ. 3 லட்சம் என உங்களால் பெரும் நிதியத்தை உருவாக்க முடியும்.
34
வட்டி விகித விவரங்கள்
சாதாரண குடிமக்களுக்கு: 6.55% வரை வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு: 7.05% வரை கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.
நீங்கள் கட்டிய அசல் தொகையுடன் வட்டியும் சேர்ந்து மொத்தமாகத் திரும்பத் தரப்படும்.
இந்தியக் குடிமக்கள் எவரும் இத்திட்டத்தில் சேரலாம். தனிநபர் கணக்காகவோ அல்லது கூட்டுக் கணக்காகவோ (Joint Account) தொடங்கலாம்.
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் பெற்றோருடன் இணைந்த கூட்டுக் கணக்கு அனுமதிக்கப்படும்.
பணம் தேவைப்படும் காலங்களில் உறவினர்களிடம் கையேந்துவதை விட, இது போன்ற சிறுசேமிப்புத் திட்டங்கள் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெரிதும் உதவும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.