ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, நாசிக் மாவட்ட மகளிர் வளர்ச்சி சகாரி வங்கி லிமிடெட் மீது வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949ன் பல பிரிவுகளின் கீழ் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, வங்கிக்கு ஆர்பிஐ அனுமதி இன்றி கடன் வழங்கவும், புதுப்பிக்கவும் அனுமதி இல்லை. புதிய முதலீடுகள், புதிய டெபாசிட்கள் ஏற்குதல், சொத்துக்கள் வாங்குதல் அல்லது விற்பனை செய்தல் என அனைத்து நடவடிக்கைகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.