போஸ்ட் ஆபீஸ் பம்பர் சேமிப்புத் திட்டம்! ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு வட்டி மட்டும் ரூ.2.25 லட்சம்!

First Published May 17, 2023, 2:40 PM IST

அஞ்சல்துறையில் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக மட்டும் 2.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

அதிக லாபம் தரும் முதலீடு

தபால் அலுவலகம் பல சிறு சேமிப்புத் திட்டங்களை வழங்குகிறது. ஒரு முதலீட்டாளர் நிலையான வருமான திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால், போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் ஒரு சிறந்த வழி.

5 ஆண்டு முதலீடு

இது வங்கியின் நிலையான வைப்புத்தொகை போன்றது. இருப்பினும், நான்கு வெவ்வேறு காலங்களுக்கு மட்டுமே பணத்தை இதில் டெபாசிட் செய்ய முடியும். தபால் நிலையத்தின் இந்தத் திட்டத்தில் 1 வருடம், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். வட்டி காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்டு, செலுத்தப்படுகிறது.

7.5 சதவீதம் வட்டி

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, 1 ஆண்டு கால வைப்புத்தொகைக்கு 6.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு 6.9 சதவீதமும், 3 ஆண்டுகளுக்கு 7 சதவீதமும், 5 ஆண்டுகளுக்கு 7.5 சதவீதமும் வட்டி கிடைக்கும். குறைந்தபட்சமாக ரூ.1000 முதலீடு செய்யவேண்டும். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.

வட்டி மட்டும் ரூ.2.25 லட்சம்

வருமானவரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் 5 வருட கால டெபாசிட்களுக்கு வரி விலக்கு கிடைக்கும். ஒரு முதலீட்டாளர் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தில் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்தால், அவருக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 974 வட்டி கிடைக்கும். CAGR எனப்படும் ஆண்டு சராசரி வருமானம் 7.71 சதவீதம். ஐந்து வருடங்கள் முடிந்த பிறகு, அசல் தொகையான ரூ. 5 லட்சத்தையும் திரும்பப் பெறுலாம்.

ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

இத்திட்டத்தில் வழங்கப்பட்டும் வட்டி விகிதம் வங்கிகளின் சராசரி வட்டிவிகித்த்தை விட அதிகம். அதிகபட்ட முதலீட்டு வரம்பும் இல்லை. இத்திட்டத்தில் செய்த முதலீட்டை முதிர்ச்சிக்கு முன்பே எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு.

click me!