மேலும் வங்கியைக் கலைப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பிக்க இருப்பதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அப்படி வங்கியைக் கலைக்கும்போது, தனது முழு வைப்புத்தொகைப் பொறுப்பையும் திருப்பிச் செலுத்துவதற்குப் போதுமான பணப்புழக்கத்தை இந்த வங்கி கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளது. முன்னதாக கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், வாடிக்கையாளர் கணக்குகளில் புதிய டெபாசிட்டுகள், வாலட் டாப்பப்கள் மற்றும் கிரெடிட் பரிவர்த்தனைகளை செய்யத் தடை விதிக்கப்பட்டது. இந்த தடைகள் வங்கியின் வளர்ச்சியை முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.