Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

Published : Apr 24, 2026, 06:00 PM IST

PM Kisan Maandhan Yojana Benefits : தினமும் வெறும் ₹1.80 செலவுல உங்க வயதான காலத்தை பாதுகாக்க முடியும்னு சொன்னா நம்புவீங்களா? ஆமாங்க, பிரதம மந்திரி கிசான் மாந்தன் யோஜனா அப்படி ஒரு திட்டம்தான். அந்த திட்டம் பற்றி இந்த பதிவில் தெரிஞ்சிக்கலாம் வாங்க.! 

PREV
17
PM Kisan Maandhan Yojana Benefits

பிரதம மந்திரி கிசான் மாந்தன் யோஜனா என்பது விவசாயிகளுக்கான ஒரு பிரத்யேக ஓய்வூதியத் திட்டம். இந்தத் திட்டத்தில், நீங்கள் செலுத்தும் தொகைக்கு சமமான தொகையை அரசாங்கம் உங்கள் கணக்கில் செலுத்தும். உதாரணமாக, நீங்கள் மாதம் ₹100 செலுத்தினால், அரசாங்கம் ₹100 செலுத்தும். ஆக, உங்கள் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ₹200 சேமிப்பு ஆகும்.

27
கிசான் பென்ஷன் திட்டத்தின் நோக்கம்

சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் 60 வயதுக்குப் பிறகு, கௌரவமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

37
தினமும் ₹1.80 சேமித்தால் போதும்

இந்தத் திட்டத்துல நீங்க எவ்வளவு பணம் கட்டணும்ங்கிறது உங்க வயசைப் பொறுத்தது. நீங்க 18 வயசு விவசாயினா, மாசம் ₹55 கட்டினா போதும். அதாவது, ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ₹1.80 தான். இதே நீங்க 40 வயசுல சேர்ந்தா, மாசம் ₹200 கட்டணும். இது ஒரு நாளைக்கு சுமார் ₹6.60 வரும்.

47
விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும்

நீங்க எந்த வயசுல இந்தத் திட்டத்துல சேர்ந்தாலும், உங்களுக்கு 60 வயசு ஆனதுக்கு அப்பறம் மாசம் ₹3,000 பென்ஷன் கிடைக்க ஆரம்பிக்கும். இதன்மூலம், ஒரு வருஷத்துக்கு நீங்க ₹36,000 பென்ஷன் வாங்கலாம்.

57
விவசாயி இறந்துவிட்டால் மனைவிக்கு ஓய்வூதியம்

ஒருவேளை இந்தத் திட்டத்தில் இணைந்த விவசாயி இறந்துவிட்டால், அவருடைய மனைவிக்கு பாதியளவு பென்ஷன், அதாவது மாதா மாதம் ₹1,500 தொடர்ந்து கிடைக்கும். இதனால உங்க குடும்பத்துக்கு ஒரு நிதி ஆதாரம் இருக்கும். நீங்க இல்லாத காலத்திலும் உங்க மனைவி யாரையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. (பிள்ளைகளுக்கு இந்த உரிமை கிடையாது).

67
கிசான் பென்ஷன் திட்டத்தில் சேர தகுதிகள் என்ன?

விவசாயியோட வயசு 18-ல இருந்து 40-க்குள்ள இருக்கணும். அவருகிட்ட 2 ஹெக்டேர் அல்லது அதுக்கும் குறைவான விவசாய நிலம் மட்டும்தான் இருக்கணும். EPFO, NPS மாதிரி வேற எந்த அரசு ஓய்வூதியத் திட்டத்திலும் அவர் உறுப்பினரா இருக்கக் கூடாது.

77
கிசான் பென்ஷன் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?

பக்கத்துல இருக்குற பொது சேவை மையத்துக்கு (CSC) போங்க. உங்க ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக், நிலப் பத்திரம் (சிட்டா/அடங்கல் மாதிரி) போன்ற ஆவணங்களை எடுத்துட்டுப் போங்க. அங்கேயே உங்க விண்ணப்பத்தை நிரப்பி, உங்களுக்கான பென்ஷன் கணக்கைத் தொடங்கிடுவாங்க.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories