இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிதான், பணப் பயன்பாடு பெருமளவில் அதிகரித்திருப்பதற்கான முக்கிய காரணம் என்று SBI ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. FY12 முதல் FY26 வரை, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆண்டுக்கு 9.4% கூட்டு வளர்ச்சியைக் கண்டது. அதே காலகட்டத்தில், புழக்கத்தில் உள்ள தனிநபர் பணத்தின் அளவு 9.0% வளர்ச்சி அடைந்துள்ளது.
"புழக்கத்தில் உள்ள தனிநபர் பணத்தின் வளர்ச்சி, GDP வளர்ச்சியை விட சற்று குறைவாகவே உள்ளது" என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த சிறிய இடைவெளியை UPI பரிவர்த்தனைகள் ஈடுசெய்வதாகவும், இது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் படிப்படியாக வளர்ந்து வருவதைக் காட்டுவதாகவும் தெரிகிறது.
ரொக்க பணம் 5 மடங்கு அதிகரிப்பு
இந்த அறிக்கையின் ஒரு முக்கிய கண்டுபிடிப்பு, மக்கள் கையில் வைத்திருக்கும் பணத்திற்கும், ATM-களில் இருந்து எடுக்கும் பணத்திற்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருப்பதுதான். இது மக்கள் முன்னெச்சரிக்கைக்காக பணத்தை சேமித்து வைப்பதைக் காட்டுகிறது. தனிநபர் கையில் வைத்திருக்கும் பணத்திற்கும், ATM-ல் இருந்து எடுத்த பணத்திற்கும் இடையிலான வித்தியாசம் FY24-ல் ₹1,804 ஆக இருந்தது, FY26-ல் ₹9,127 ஆக, அதாவது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
"சமூக ஊடகங்கள் மூலம் பரவும் செய்திகளால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை மற்றும் பதற்றம் காரணமாக, மக்கள் முன்னெச்சரிக்கைக்காக பணத்தை கையில் வைத்திருக்க விரும்புகிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என அறிக்கை கூறுகிறது.