ஏப்ரல் 1, 2026 முதல் HDFC, PNB மற்றும் பந்தன் வங்கி ஆகியவற்றின் ஏடிஎம் பரிவர்த்தனை விதிகளில் பெரிய மாற்றங்கள் வரவுள்ளன. இதனால் பணம் எடுப்பது காஸ்ட்லி ஆகலாம். இனி UPI மூலம் பணம் எடுப்பதும் இலவச பரிவர்த்தனைகளில் கணக்கிடப்படும்.
ஏப்ரல் 1 முதல் ATM-ல் பணம் எடுப்பது காஸ்ட்லி ஆகப்போகுது
ஏப்ரல் 1, 2026 முதல் புதிய நிதியாண்டு தொடங்குகிறது. இதனுடன், மக்களின் பாக்கெட்டை நேரடியாக பாதிக்கும் வங்கி விதிகளும் மாறுகின்றன. குறிப்பாக HDFC Bank, PNB மற்றும் Bandhan Bank ஆகியவை தங்கள் ஏடிஎம் (ATM) பரிவர்த்தனை வரம்புகள் மற்றும் கட்டணங்களில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளன. இனி தேவையில்லாமல் ஏடிஎம் பயன்படுத்துவது உங்களுக்கு காஸ்ட்லியாக அமையலாம். என்னென்ன மாற்றங்கள் என்று விரிவாகப் பார்ப்போம்.
25
HDFC Bank: UPI-ல் பணம் எடுத்தாலும் இனி 'ஃப்ரீ' இல்லை
HDFC வங்கி தனது விதிகளில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இனி நீங்கள் ஏடிஎம் சென்று UPI மூலம் (QR Code ஸ்கேன் செய்து) பணம் எடுத்தாலும், அதுவும் உங்கள் வழக்கமான 'இலவச பரிவர்த்தனை' வரம்பில் கணக்கிடப்படும். சொந்த வங்கி ஏடிஎம்: மாதத்திற்கு 5 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசம். மற்ற வங்கி ஏடிஎம்: மெட்ரோ நகரங்களில் 3, மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 இலவச பரிவர்த்தனைகள். வரம்பு முடிந்தால்: ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ₹23 + வரி செலுத்த வேண்டும்.
35
PNB பணம் எடுக்கும் வரம்பு பாதியாகக் குறைப்பு
PNB வங்கி, தனது பல்வேறு டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் வரம்பை (Daily Cash Withdrawal Limit) நேரடியாக பாதியாகக் குறைத்துள்ளது. பிளாட்டினம், கோல்டு மற்றும் பிஸ்னஸ் கார்டு: முன்பு ₹1 லட்சமாக இருந்த வரம்பு, இப்போது ₹50,000 மட்டுமே. செலக்ட் மற்றும் சிக்னேச்சர் கார்டு: முன்பு ₹1.5 லட்சம் எடுக்கலாம், இப்போது இந்த வரம்பு ₹75,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
Bandhan Bank: பரிவர்த்தனை எண்ணிக்கையில் கட்டுப்பாடு
பந்தன் வங்கியும் இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் மாற்றங்களைச் செய்துள்ளது. சொந்த வங்கி ஏடிஎம்: மாதத்திற்கு 5 இலவச நிதிப் பரிவர்த்தனைகள் (Financial Transactions). மற்ற வங்கி ஏடிஎம்: மெட்ரோ நகரங்களில் 3, மற்ற நகரங்களில் 5 இலவச பரிவர்த்தனைகள். சிறப்புச் சலுகை: நிதி அல்லாத பரிவர்த்தனைகள் (உதாரணமாக, பேலன்ஸ் செக் செய்வது) தற்போதைக்கு வரம்பற்றதாகவே இருக்கும்.
55
கட்டணங்களைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களின்படி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் வங்கிகள் இந்த மாற்றங்களைச் செய்துள்ளன. கூடுதல் கட்டணத்தைத் தவிர்க்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. டிஜிட்டல் பேமெண்ட்: முடிந்தவரை UPI, நெட் பேங்கிங் அல்லது மொபைல் ஆப் பயன்படுத்துங்கள். பணத் திட்டமிடல்: மாதத்திற்கு எவ்வளவு ரொக்கம் தேவை என்பதைத் திட்டமிட்டு, ஒரே நேரத்தில் பெரிய தொகையை எடுங்கள். இதனால் பரிவர்த்தனை எண்ணிக்கை കൂടாது. மெட்ரோ vs நான்-மெட்ரோ: நீங்கள் எந்த நகரத்தில் ஏடிஎம் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, இலவச வரம்பை நினைவில் கொள்ளுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.