இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த டாடா குழுமத்தின் மூத்த அதிகாரி, "உங்களுக்கு பயணிகள் கார்களைப் பற்றி எதுவும் தெரியாது, நீங்கள் ஏன் வியாபாரத்தை ஆரம்பித்தீர்கள்? உங்கள் கார் பிரிவை வாங்கி நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம்" என்று எங்களிடம் சொன்னார்கள்." என்று கூறினார்.
கூட்டத்திற்குப் பிறகு, ரத்தன் டாடா, இண்டிகா கார் பிரிவை விற்க வேண்டாம் என்று முடிவு செய்தார். டாடா மோட்டார்ஸை மாற்றவும், இண்டிகா மாடலை மேம்படுத்தவும் கடுமையாக உழைத்தார்.. காரின் புதிய பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தடு. இது டாடாவின் அதிக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாறும்.