இந்த 5 பண தவறுகள் உங்களை ஏழையாக வைத்திருக்கலாம்.. நோட் பண்ணுங்க

Published : Jan 27, 2026, 11:24 AM IST

பல நடுத்தர குடும்பங்கள், சேமிப்பை விட செலவுகளுக்கு முன்னுரிமை அளிப்பது, இஎம்ஐ வலையில் சிக்குவது, மற்றும் காப்பீட்டை தவிர்ப்பது போன்ற பொதுவான பணத் தவறுகளை செய்கின்றன.

PREV
15
நடுத்தர குடும்ப பண தவறுகள்

பல நடுத்தர குடும்பங்களில் சம்பளம் வந்தவுடன் செலவுகள் தானாகவே வரிசையாக நிற்கும். வீட்டு வாடகை, மின் கட்டணம், மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன் ஆர்டர், வார இறுதி சாப்பாடு என அனைத்தும் முன்பே முடிவாகிவிடுகிறது. ஆனால் சேமிப்பு மட்டும் “மிச்சம் இருந்தால்” என்ற இடத்தில் தள்ளப்படுகிறது. இதுதான் அடிப்படை தவறு. சேமிப்பு என்பது செலவுகளுக்குப் பிறகு வரும் விஷயம் அல்ல. வருமானம் வந்தவுடன் முதலில் ஒதுக்க வேண்டிய பணம். இந்த பழக்கம் இல்லாமல் எந்த மாதமும் நிதி கட்டுப்பாட்டில் வராது.

25
இஎம்ஐ வசதி என்ற மாயை

இன்றைக்கு இஎம்ஐ இல்லாத வாழ்க்கையை கற்பனைக்கே கொண்டு வர முடியாத நிலை. மொபைல், டிவி, பைக், கிரெடிட் கார்டு – அனைத்தும் மாத தவணைகளாக மாறிவிட்டன. “மாதம் இவ்வளவுதானே” என்று நினைத்து எடுத்த இஎம்ஐ-கள் சேர்ந்து, சம்பளத்தின் பெரிய பகுதியை உறிஞ்சிவிடுகிறது. ஒரு மாதம் வருமானம் தாமதமானாலோ, உடனே அழுத்தம் தொடங்கும். இஎம்ஐ வசதி போல் தோன்றினாலும், அது நீண்டகால நிதி சுதந்திரத்தை குறைக்கும் சங்கிலி என்பதை பலர் உணர்வதில்லை.

35
சேமிப்பும் முதலீடும் ஒன்றல்ல

வங்கியில் பணத்தை வைத்தாலே அது வளர்ந்து விடும் என்ற நம்பிக்கை இன்னும் பலரிடம் உள்ளது. உண்மையில் வங்கிச் சேமிப்பு பாதுகாப்புக்கானது மட்டுமே. பணவீக்கம் காரணமாக, அந்த பணத்தின் வாங்கும் சக்தி ஆண்டுதோறும் குறைந்து கொண்டே போகிறது. முதலீடு என்றால் பணத்தை வேலை செய்ய வைப்பது. இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளாமல் இருப்பதால், பல நடுத்தர குடும்பங்கள் வீடு, குழந்தைகளின் கல்வி, ஓய்வு காலம் போன்ற இலக்குகளை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் இது தவறு ஆகும்.

45
காப்பீட்டை தவிர்க்கும் ஆபத்து

“நமக்கு எதுவும் ஆகாது” என்ற எண்ணம் மனிதர்களுக்கு இயல்பானது. ஆனால் வாழ்க்கை எப்போதும் கணிக்க முடியாதது. ஹெல்த் இன்சூரன்ஸ், டெர்ம் இன்சூரன்ஸ் போன்றவை தேவையற்ற செலவாக பார்க்கப்படுகின்றன. உண்மையில் அவை பாதுகாப்பு கவசம். ஒரு மருத்துவ அவசரம் அல்லது குடும்பத்தில் எதிர்பாராத சம்பவம் ஏற்பட்டால், பல வருட சேமிப்பு ஒரே நேரத்தில் கரைந்து போகும். இந்த உண்மையை அனுபவித்த பிறகுதான் பலர் காப்பீட்டின் முக்கியத்துவத்தை உணர்கிறார்கள். அதுவே இந்த தவறின் தீவிரம்.

55
வருமான வளர்ச்சியை மறந்து விடுவது

பலர் செலவைக் குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் செலவை குறைப்பதற்கு ஒரு எல்லை உண்டு. அதற்கு மேல் குறைக்க முடியாது. வருமானத்தை உயர்த்துவது தான் நீண்டகால தீர்வு. புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது, கூடுதல் வருமான வாய்ப்புகளைத் தேடுவது, சைடு இன்கம் முயற்சிகள் ஆகியவை பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. மேலும், குடும்பத்தில் பண விஷயங்களை வெளிப்படையாக பேசாத பழக்கம், இந்த எல்லா தவறுகளையும் மேலும் பெருக்குகிறது. பண மேலாண்மை என்பது தனிப்பட்ட விஷயம் அல்ல; அது குடும்பத்தின் கூட்டு முடிவு. நடுத்தர குடும்பங்களின் நிதி சிக்கல்கள் பெரும்பாலும் மாதம் மாதம் செய்யும் சிறிய தவறுகளின் கூட்டுத்தொகை தான். இந்த தவறுகளை உணர்ந்து, பழக்கங்களில் சிறு மாற்றம் செய்தாலே எதிர்கால நிதி நிலை மெதுவாக ஆனால் உறுதியாக மேம்படும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories