தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) புதிய அறிவிப்பின்படி, இன்று (ஏப்ரல் 1) முதல் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்தம் 77 சுங்கச்சாவடிகளில், 66 சுங்கச்சாவடிகளில் இந்த புதிய கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களின் வகையைப் பொறுத்து 5% முதல் 7% வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கார்கள், பேருந்துகளுக்கு எவ்வளவு?
கார்கள் மற்றும் ஜீப்கள் ஒரு முறை பயணத்திற்கு ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. பேருந்துகள் மற்றும் லாரிகள் வாகனத்தின் அளவைப் பொறுத்து ரூ.15 முதல் ரூ.50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். பெரிய கனரக வாகனங்கள் தற்போதைய கட்டணத்திலிருந்து ₹100 முதல் ₹200 வரை கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது.