EPFO இந்தத் திட்டத்தைப் படிப்படியாக செயல்படுத்தும். முதலில், ரூ.1,000 அல்லது அதற்கும் குறைவான பேலன்ஸ் உள்ள கணக்குகளுக்கு ஆட்டோ செட்டில்மென்ட் வசதி வழங்கப்படும். சமீபத்தில் நடந்த மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டத்தில் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் கிடைத்தது. உறுப்பினர்களின் KYC மற்றும் வங்கி விவரங்கள் சரியாக இருந்தால், பணம் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இந்த பைலட் திட்டம் வெற்றி பெற்ற பிறகு, பெரிய தொகை உள்ள கணக்குகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.
க்ளெய்ம் செய்யப்படாத நிதிகள்
EPFO-விடம் உள்ள தரவுகளின்படி, க்ளெய்ம் செய்யப்படாத நிதிகள் மிகப்பெரிய அளவில் உள்ளன. சுமார் 14,000 கணக்குகளில் ரூ. 5 லட்சம் அல்லது அதற்கு மேல் உள்ளது. 38,000 கணக்குகளில் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை உள்ளது. 41,000 கணக்குகளில் ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம் வரை உள்ளது. அக்டோபர் 2017-க்குப் பிறகு EPFO-வில் சேர்ந்த உறுப்பினர்களுக்கு இந்த ஆட்டோமேட்டட் முறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.