இந்தியன் ரயில்வே, வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் அவசர பயணங்களுக்கான புதிய டிக்கெட் ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் தொடர்பான விபரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
அவசர தேவைகளுக்காக திடீரென பயணம் செய்ய வேண்டிய சூழலில் ரயில் டிக்கெட் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவது சாதாரண விஷயம். இதை கருத்தில் கொண்டு இந்தியன் ரயில்வே முக்கியமான தீர்மானத்தை எடுத்துள்ளது. இனி வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் அவசர சூழ்நிலைகளில் பயணிப்பவர்கள் (Emergency Quota) அறிமுகமாகிறது.
25
புதிய ரிசர்வேஷன் விதி
இதுவரை இந்த ரயில்களில் பெண்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கான ஒதுக்கீடு மட்டுமே இருந்தது. தற்போது அவசர சூழ்நிலைகளில் பயணிக்க வேண்டியவர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கைகள் ஒதுக்கப்படும். அம்ரித் பாரத் ரயில்களில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்லீப்பர் கோச்கள் இருந்தால் அதிகபட்சம் 24 படுக்கைகள் எமெர்ஜென்சி கோட்டாவில் வழங்கப்படும்.
35
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் வகைப்படி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 1A வகுப்பில் வாரநாட்களில் 4, வார இறுதியில் 6 இருக்கைகள். 2A-வில் வாரநாட்களில் 20, வார இறுதியில் 30. 3A-வில் வாரநாட்களில் 24, வார இறுதியில் 42 இருக்கைகள் ஒதுக்கப்படும். இது பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட ஏற்பாடாகும்.
அட்வான்ஸ் ரிசர்வேஷன் பீரியட் (Advance Reservation Period) தொடங்கும் நாளிலிருந்தே இந்த ஒதுக்கீடு அமலுக்கு வரும். மண்டல ரயில்வே அதிகாரிகள் தேவைக்கேற்ப மாற்றங்களை செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
55
அவசர பயணிகளுக்கு நல்ல செய்தி
அவசர மருத்துவம், குடும்ப அவசரம், அலுவல் பணிகள் போன்ற சூழ்நிலைகளில் இந்த புதிய ஒதுக்கீடு பயணிகளுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். இதன் மூலம் கடைசி நேர டிக்கெட் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.