அதாவது மத்திய அரசு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா-நகர்ப்புற (PMAY-U) 2.0 திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. அதாவது ரூ.35 லட்சம் வரை மதிப்புள்ள ஒரு வீட்டிற்கு ரூ.25 லட்சம் வரை வீட்டுக்கடன்கள் வாங்கும் பயனாளிகள் தள்ளுபடி பெறுகிறார்கள்.
முதல் ரூ.8 லட்சம் வரையிலான கடனுக்கு 4% வட்டி மானியம் வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளிகளுக்கு 5 ஆன்டு கால இடைவெளியில் சுமார் 1.80 லட்சம் வரை மானியம் நேரடியாக சென்றடையும்.
யார் யார் தகுதி பெறுவார்கள்?
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை பெறும் EWS எனப்படும் பொருளாதாரத்தில் நலிந்தவர்கள், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை பெறும் LIG எனப்படும் குறைந்த வருமான பிரிவினர், ஆன்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை பெறும் MIG எனப்படும் மத்திய வருமான பிரிவினர் ஆகியோர் இந்த திட்டத்துக்கு தகுதியானவர்கள்.